வன்னிய வீரன்
உவமை கவிஞர் கவிஞர் சுரதா அவர்களால் எழுதப்பட்ட
வன்னிய வீரன் என்னும் இக் குறுங்காவியம் உண்மைக் கதையைத் தழுவி
எழுதப்பட்டது . விஜய நகர பேரரசரான கிருஷ்ணதேவராயரின் படைகளை எதிர்த்து
வீரமுடன் போரிட்ட காந்தவராயன், சேந்தவராயன் என்ற இரு வன்னிய
சகோதரர்களான குறுநில மன்னர்களின் வரலாற்றை கூறும் விதமா
அமைந்துள்ளது இக் காவியம். சுரதா ழுதிய தேன்மழை என்னும் நூலில்
இடம்பெற்றுள்ளது இக்குறுங்காவியம் .
தொண்டை நாடு
குறிஞ்சித் திணையைக் குறித்திடும் மலைகளும்
குன்றினேன் என்று குன்றிய குன்றமும்
உதித்தசெங் கதிரின் ஒளியைத் தடுத்து
நிறுத்தியும் நிழலால் நிலத்தை மெழுகியும்
வானுற வோங்கி வளர்ந்த காடுகளும்
பயன்தரும் பொழிலும் பழமுதிர்ச் சோலையும்
பனிப்புனல் ஏரியும் பளிங்கைக் கரைத்தே
ஓட விட்டாற் போன்றநீ ரோடையும்
சாகாக் கடலும் தாமரைத் தடாகமும்
தளராப் பயன்தரும் சதுர வயல்களும்
வாழையும் மங்கல மஞ்சளும் இஞ்சியும்
இயற்கை எழிலை ஏந்திக் காட்டிட;
மழைவயிறு கிழிக்கும் மாட மாளிகை,
மான்விழிச் சாளரம் வைத்த வளமனை,
ஆறுபோற் கிடந்த அகல்நெடுந் தெருக்கள்,
கூறுநல் லடியார் கோபுரக் கோயில்கள்,
ஓங்குபே ரழகினை ஓர்புறம் கூட்டிட;
குன்றினேன் என்று குன்றிய குன்றமும்
உதித்தசெங் கதிரின் ஒளியைத் தடுத்து
நிறுத்தியும் நிழலால் நிலத்தை மெழுகியும்
வானுற வோங்கி வளர்ந்த காடுகளும்
பயன்தரும் பொழிலும் பழமுதிர்ச் சோலையும்
பனிப்புனல் ஏரியும் பளிங்கைக் கரைத்தே
ஓட விட்டாற் போன்றநீ ரோடையும்
சாகாக் கடலும் தாமரைத் தடாகமும்
தளராப் பயன்தரும் சதுர வயல்களும்
வாழையும் மங்கல மஞ்சளும் இஞ்சியும்
இயற்கை எழிலை ஏந்திக் காட்டிட;
மழைவயிறு கிழிக்கும் மாட மாளிகை,
மான்விழிச் சாளரம் வைத்த வளமனை,
ஆறுபோற் கிடந்த அகல்நெடுந் தெருக்கள்,
கூறுநல் லடியார் கோபுரக் கோயில்கள்,
ஓங்குபே ரழகினை ஓர்புறம் கூட்டிட;
சான்றோர்
சீர்தளை கொண்ட செந்தமிழ்ச் செய்யுள்
தொடுத்துக் காட்டிய தொகைநூற் புலவர்க்குக்
கொடுத்துக் காட்டிய கூவத்து நாரணன்,
தொடுத்துக் காட்டிய தொகைநூற் புலவர்க்குக்
கொடுத்துக் காட்டிய கூவத்து நாரணன்,
இடையறா தளித்த சடைய நாதன்,
தேம்பாது வழிங்கிய பூம்பாவை முதலியார்,
நிறைந்த புகழாற் சிறந்தசீர் காழி
அருணா சலகவி ராயரை ஆதரித்தே
வரிசை யறிந்து வழங்கிய மணலி
முத்து கிருட்டின முதலிபோன் றோரும்,
சைவந் தழைத்திடத் தனிநூல் ஒன்றினைத்
தூக்கெனும் செய்யுளால் ஆக்கி அருளிய
சேக்கிழார் அடிகளும், செஞ்சொல் கொஞ்சும்
தஞ்சை வாணன் கோவைசெய் தருளிய
பொய்யா மொழியரும், பொன்வினை களத்தூர்
புகழேந்திப் புலவரும், பொங்கு தமிழ்ச்சுவை
தங்கிய பாடல்கள் தங்கிய பலநூல்
பாடி அருளிய படிக்காசுப் புலவரும்
செய்த நூற்களின் சிந்தனை உலவிட;
வாடாத சான்றோர் வகுத்தநல் லறமும்
பிழைபடாக் கற்பும் பின்படா வீரமும்
கொண்டுபுகழ் கொண்டது தொண்டை நன்னாடு
தேம்பாது வழிங்கிய பூம்பாவை முதலியார்,
நிறைந்த புகழாற் சிறந்தசீர் காழி
அருணா சலகவி ராயரை ஆதரித்தே
வரிசை யறிந்து வழங்கிய மணலி
முத்து கிருட்டின முதலிபோன் றோரும்,
சைவந் தழைத்திடத் தனிநூல் ஒன்றினைத்
தூக்கெனும் செய்யுளால் ஆக்கி அருளிய
சேக்கிழார் அடிகளும், செஞ்சொல் கொஞ்சும்
தஞ்சை வாணன் கோவைசெய் தருளிய
பொய்யா மொழியரும், பொன்வினை களத்தூர்
புகழேந்திப் புலவரும், பொங்கு தமிழ்ச்சுவை
தங்கிய பாடல்கள் தங்கிய பலநூல்
பாடி அருளிய படிக்காசுப் புலவரும்
செய்த நூற்களின் சிந்தனை உலவிட;
வாடாத சான்றோர் வகுத்தநல் லறமும்
பிழைபடாக் கற்பும் பின்படா வீரமும்
கொண்டுபுகழ் கொண்டது தொண்டை நன்னாடு
ஆடிற்று நாடு
சொல்லத் சொல்லத் தொடர்ந்தே பரவும்
நல்ல புகழொடும் நடுங்காத் திறத்தொடும்
இத்தொண்டை நாட்டினை இளந்திரையன் ஆண்டனன்,
மாலை வெகுண்ட மன்னவன் மாண்டபின்
மரபுமுறை கெடாமல் மற்றவர் ஆண்டனர்,
நல்ல புகழொடும் நடுங்காத் திறத்தொடும்
இத்தொண்டை நாட்டினை இளந்திரையன் ஆண்டனன்,
மாலை வெகுண்ட மன்னவன் மாண்டபின்
மரபுமுறை கெடாமல் மற்றவர் ஆண்டனர்,
ஏற்றிய விளக்கில் எண்ணெய் குறைந்திடின் வளர்ந்த வெளிச்சம் வரவரக் குறைந்திடும், அதுபோல், பின்வந்தோர் ஆட்சி தளரவே, பகையும் கொடிய பசியும் பிணியும் குறையாக் கவலையும் குறும்புக் கலகமும் அடிக்கடி தோன்றவே ஆடிற்று நாடு! வடபெருங் கடலையும் மணிக்கடல் நீரையும் இத்தமிழ் நாட்டின் எல்லைக ளாக்கி, மொழியை ஒன்றாக்கி முடியைமூன் றாக்கி வீரம் விளைந்தமூ வேந்தர் மரபிலே வந்தோர்ஆண்ட மணித்திரு நாடாம் தொண்டை நாடு சண்டைநா டானது! தாய்மொழிப் பற்றும் தன்மான உணர்ச்சியும் காலை நேரத்து நிழல்போல் குறைந்ததால் சார மற்ற சரித்திரம் வளர்ந்தது, வேற்று நாட்டினர் விழுங்கினர் தமிழரை! தூங்கிய தமிழகம் தோற்றது பிறரிடம்! புலிக்கொடி வீழவே எலிக்கொடி பறந்தது! ஆந்திர அரசு
வேர்கொண்ட புகழொடு சிறந்து விளங்கிய
தேர்வேந்தன் கிருட்டின தேவன் என்பான், செங்கழுநீர்ப் பட்டெனும் செங்கற் பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பழம்புக ழூராம் விடையீச் சுரத்தில் வீற்றர சாண்டனன். மரத்தின் கீழ்வளர் மரம்போல், ஒருசிலர் அவனுக் கடங்கி ஆட்சி செய்தனர், வீரன் காந்தவராயன்
காந்தவ ராயன் கட்டிளங் காளை.
இமய மலையே எதிர்த்த போதிலும் அசைப்பது கடினம் அன்னவன் தோளை! அவனோ, குறுநில மன்னவன்; ஏந்துவாள் வெற்றிகள் பெற்ற விழுப்புண் வீரன்! பகைமுகங் கண்டு நகைமுகங் காட்டிய நெருப்பு வன்னியன்! நினைப்பில் திண்ணியன்! தாழ்ந்துபோய் உள்ளம் தளர்ந்துபோ யிருந்த தமிழரை எல்லாம் தட்டி யெழுப்பிய தலைவன்; இரும்பிடர்த் தலையார் போன்றவன்; கிருட்டின தேவனை விரட்ட முயன்றவன்,
உரிமைப் போர்
வன்னிய வீரனை அந்நியத் தெலுங்கன்
அடக்குதற் காகப் படைகளை அனுப்பினான்; வந்த படைகளை வன்னியன் வீழ்த்தினான்; பின்னரும் ஆந்திரன் பெரும்படை அனுப்பினான், முரட்டுக் குதிரைகள் முன்னே சென்றிட, வினைத்தொகை யானைகள் விரைந்து நடந்திட, வீர வன்னியன் வெறியோ டெழுந்தனன்; அன்னவன் தம்பியும் அவனோ டெழுந்தனன்! தடித்த தோளினர் தடக்கை வாளினர் வெடித்த சிரிப்பினர் விழிக்கண் தீயினர் கடித்த வாயினர் கருங்கடற் குரலினர் தடித்த தோளினைத் தட்டி யதட்டினர்!
|